Skip to main content

Posts

Showing posts from December, 2025

நூல் அறிமுகம் - இந்திரா பார்த்தசாரதியின் நாடகம், ராமானுஜர்

  நூல் அறிமுகம்: ’ராமாநுஜர்’, இந்திரா பார்த்தசாரதியின் நாடகம். சாதியற்ற சமுதாயத்தை; அனைவருக்குமான வைணவத்தை நிறுவ விரும்பிய   ஓர் ஆச்சாரியாரின் வரலாறு. -பெ.விஜயகுமார். 1930இல் சென்னையில் பிறந்து. கும்பகோனத்தில் வாழ்ந்த பார்த்தசாரதி தன் மனைவி இந்திராவின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டு இந்திரா பாத்தசாரதி என்ற புனைபெயரில் எழுதுகிறார். குடந்தை அரசு கல்லூரியில் பட்டப் படிப்பையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்துவிட்டு, மூன்றாண்டுகள் திருச்சி தேசியக் கல்லூரியிலும், நாற்பதாண்டுகள் டில்லி பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார். ஐந்தாண்டுகள் போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியாரகவும் இருந்துள்ளார். நிறைய சிறுகதைகள், 19 நாவல்கள், 15நாடகங்கள் எழுதியுள்ளார்.   சாகித்ய அகாதமி விருது, சங்கீத் நாடக அகாதமி விருது, பாரதிய பாஷா பரிஷத், பத்மஸ்ரீ விருது, தி இந்து லிட் ஃபார் லைஃப் - வாழ்நாள் சாதனையாளர் விருது, போன்ற விருதுகள் பெற்றுள்ளார். சாகித்ய அகாதமி ஃபெல்லோஷிப் என்ற கௌரவமும் கிடைத்துள்ளது. சரஸ்வதி சம்மான் விருது பெற்ற ராமாநு...

நூல் அறிமுகம்: பேரா.தா.சந்திரகுருவின் - கீதா பிரஸ் - விருதுகளும் சர்ச்சைகளும்

  நூல் அறிமுகம்: பேரா.தா.சந்திரகுருவின்: ‘கீதா பிரஸ் – விருதுகளும் சர்ச்சைகளும்’ - கோரக்பூர் மர்மங்களைச் சொல்லிடும் நூல்.    - பெ.விஜயகுமார்.                                     இயமலைச் சரிவில் ரப்தி நதிக்கரையில் அமைந்திருக்கும் கோரக்பூர் எனும் நகரில் கீதா பிரஸ் நிறுவனம் 1923ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா மற்றும் இந்த நிறுவனம் நடத்திவரும் கல்யாண் இதழின்’ ஆசிரியராக நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஹனுமன் பிரசாத் போதார் என்ற இருவரும் மார்வாடிகள். இந்தியாவின் மிகப் பெரிய வணிக சமூகமாகத் திகழும் மார்வாடிகளின் நிதிக் கொடையில் கீதா பிரஸ் இயங்கிவருகிறது. இந்நிறுவனம் ஹிந்து மதம் சார்ந்த புத்தகங்களான பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், மனுஸ்மிருதி போன்ற புத்தகங்களை அச்சிட்டு, விநியோகம் செய்து சனாதன ஹிந்து மதக் கருத்துகளை பரப்புரை செய்கிறது. கீதா பிரஸின் தோற்றம், வரலாறு, செயல...