Skip to main content

Posts

Showing posts from April, 2018

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள் - ச.தமிழ்ச்செல்வன்

நூல் அறிமுகம் அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள் ஆசிரியர் : ச . தமிழ்ச்செல்வன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் விலை : ரூ .250/- நாட்குறிப்புகள் நல்லதொரு படைப்புகளாகப் பரிணமிப்பதில் வியப்பேதுமில்லை . அ . முத்துலிங்கம் அவர்களின் “ உண்மை கலந்த நாட்குறிப்புகள் ” வாசகர்களுக்கு நல்விருந்து நல்கும் நூலாகியுள்ளது . நாஜி ஜெர்மனியிலிருந்து தப்பி ஆம்ஸ்டர்டாமில் ஒளிந்து வாழ்ந்த பதி ன் மூன்றுவயதுச் சிறுமி ஆன் ஃப்ராங்க் எழுதிய டைரி அற்புதமான வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது . புதுச்சேரியில் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு துபாசியாக வேலைபார்த்த அனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்புகள் பிரெஞ்சு காலனிய கால வாழ்வை அறிந்துகொள்ள ஏதுவான ஏடாகிறது . அதுபோல் தமிழகத்தின் அரசியல் , சமூக , பொருளாதார , கலாச்சாரப் பிரச்சனைகள் , நிகழ்வுகள் குறித்து தோழர் தமிழ்ச்செல்வன் அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய சரித்திரச் சுவடுகளாகும் . ஒரு தேர்ந்த படைப்பாளியின் ஆழ்ந்த விமர்சனங்களாக , நினைவலைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன . இவற்றினைத் தொகுத்து பாரதி புத்தகாலயம்  “ அவ்வப்போது எழுதிய நா...

குஜராத் கோப்புகள் - ராணா அயூப்

நூல் அறிமுகம் குஜராத் கோப்புகள் ஆசிரியர் : ராணா அயூப் தமிழில்; ச.வீரமணி வெளியீடு : பாரதி புத்தகாலயம் விலை : ரூ .170/-   இந்தியாவையே திகைக்கவைத்த நூல் ராணா அயூப் என்ற இளம் இஸ்லாமியப் பெண் தன்னுடைய தீரச் செயல் மூலம் இந்தியாவையே திகைக்க வைத்துள்ளார் . எழுத்து எவ்வளவு வலுவான ஆயுதம் என்பதை நிரூபித்துள்ளார் . 2002 ஆம் ஆண்டு உலகையே கு லு க்கிய குஜராத் வன்முறை குறித்த திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொணர்ந்து சாதனை படைத்துள்ளார் . அன்று மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த குஜராத் வன்முறை இந்தியர்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்தது . இச்சம்பவம் குறித்த உண்மைகளை ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளர் என்ற முறையில் தன் உயிரையும் பணயம் வைத்து மறைக்கப்பட்ட கோர வடிவங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் . ” குஜராத் கோப்புகள் ” என்ற இந்த நூல் வெளிவந்த விதமே சுவையானதாகும் . தெஹல்கா , “ ஸ்டிங் ஆப்பரேஷன் ” மூலம் அதிகார வர்க்கத்தினரின் ரகசிய பேரங்களை அம்பலப்படுத்திடும் ஒரு புலனாய்வுப் பத்திரிக்கை . பா . ஜ . க . வின் அன்றைய தலைவர் பங்காரு லஷ்மணன் இந்திய ரா...