அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் - இழவு வீட்டில் பறை அடிப்பதை இழிவின் அடையாளம் எனக் கருதி தன் சமூக மக்களை அதிலிருந்து விடுவிக்கப் போராடும் ஒரு போராளியின் கதை. -பெ.விஜயகுமார். அழகிய பெரியவன் வேலூர் மாவட்டம் பேராணம்பட்டைச் சேர்ந்தவர். இயற்பெயர் அரவிந்தன். பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். நான்கு நாவல்களும், நிறையச் சிறுகதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் பல கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. பெரியார் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழக அரசின் நாவல். கவிதைகளுக்கான விருது, கலை இலக்கிய பெருமன்ற விருது எனப் பல விருதுகளும் பெற்றுள்ளார். ’கண்காணிக்கும் மரணம்’, ’குறடு’ இவ்விரண்டு சிறுகதைகளும் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இந்திய சுதந்திரத்திற்கு முன்னதான காலத்தையும், காட்சிகளையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார் நாவலாசிரியர். அவரும் அறிந்திராத 1940களின் தமிழகத்தைத் தத்ரூபமாகச் சித்தரிப்பது நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. காலத்தைப் பின்னோக்கி...