Skip to main content

Posts

Showing posts from June, 2025

நூல் அறிமுகம் - தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ் - தாமஸ் ஹார்டி

நூல் அறிமுகம் தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நே ட்டிவ் ’ - நிறைவேறாக் காதலின் வலியைச் சொல்லிடும் நாவல் பெ.விஜயகுமார்                                                      ஆங்கில இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் கவிஞர் , பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவலாசிரியர் என்று சற்று வினோதமாக   தாமஸ் ஹார்டி (1840-1925) கொண்டாடப்படுகிறார் . ஏராளமான கவிதைகளும், ’ஜுட் தி அப்ஸ்கியூர்’, ’தி மேயர் ஆஃப் கேஸ்டர் பிரிட்ஜ்,’, ’டெஸ்’ ’உட்லாண்டர்ஸ்’, தி டரம்பட் மேஜர்’, ’ஃபார் ஃப்ரம் தி மேடிங்க் கிரவுடு’ போன்ற நாவல்களும் தாமஸ் ஹார்டி எழுதியுள்ளார். விக்டோரியா ராணி காலத்தில் அவர் பிறந்து வளர்ந்த இங்கிலாந்தின் வெசக்ஸ் (Wessex) பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளைச் சித்தரிப்பதால் ’வெசக்ஸ் நாவல்கள்’ என்று ஹார்டியின் நாவல்கள...

நுல் அறிமுகம் - வார்த்தைகள் மலையாள நாவல், தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன்

  நூல் அறிமுகம் சந்தோஷ் குமாரின்   ’வார்த்தைகள்’ - குரல் வளமிக்க பெண்மணி தனது பேசும் திறனைத் திடீரென இழந்த அவலத்தைச் சித்தரிக்கும் நாவல் பெ.விஜயகுமார்                                                          கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சந்தோஷ் குமார் எழுதிய ‘வாக்குகள்’ எனும் நாவலை ‘வார்த்தைகள்’ என்று தலைப்பிட்டு சிதம்பரம் ரவிச்சந்திரன் அழகு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஏதேனும் ஒரு மனிதத் திறனை இழந்தவர்களை மாற்றுத்திறனாளிகள் என்றழைக்கும் காலமிது. ‘ஊனம்’ என்ற சொல் வழக்கொழிந்து போயுள்ளது. பிறவியிலேயே ஏதேனும் ஒரு திறனை இழந்திருப்பது ஒருவகைத் துயர். அதனினும் துயரானது, இருந்த திறனை இடைவெளியில் இழந்து தவிப்பது. மிகச் சிறந்த குரல் வளத்தைப் பெற்றி...