Skip to main content

Posts

Showing posts from May, 2025

மேலாண்மை பொன்னுச்சாமி - சிறுகதைகள் - ஓர் அறிமுகம்

  மேலாண்மை பொன்னுச்சாமி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் கலை இலக்கியம் குறித்த அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தி வருகிறது. இந்த சங்கத்தைச் சார்ந்த அருணன், தமிழ்ச்செல்வன், கந்தர்வன், ஆதவன் தீட்சன்யா, வேல ராமமூர்த்தி, லெட்சுமணப் பெருமாள் போன்றவர்கள் தமிழ் இலக்கிய வெளியில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். இவர்களில் ஒருவரான மேலாண்மைப் பொன்னுச்சாமி புனைகதை இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் இருக்கும் மேலாண்மறை நாடு எனும் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த பொன்னுச்சாமி நிறைய சிறுகதைகளையும், முற்றுகை, இனி, ஆகாயச் சிறகுகள் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார். இவரின் ’முற்றுகை’ நாவல் கல்கி இதழின் சிறந்த நாவலுக்கான பரிசை வென்றது. சாகித்ய அகாதமி விருது மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மாட்சிமை விருது என்று பல விருதுகளையும் பெற்றுள்ளார். த.மு.எ.க.சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்து அதை வழிநடத்திய பெருமையும் இவருக்குண்டு. ’செம்மலர்’ இலக்கிய இதழின்...

திலீப்குமார் - சிறுகதைகள் - ஓர் அறிமுகம்

  திலீப்குமார் தமிழகத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஏழு கோடியாகும் . இதில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் சுமார் ஒரு கோடிப்பேர் . இதேபோல் மலையாளம் , கன்னடம் , குஜராத்தி , மராத்தி , இந்தி , பெங்காலி , பஞ்சாபி என்று பல மொழி பேசுபவர்களும் வாழ்கின்றனர் . இவர்களில் சிலர் தமிழில் நன்கு தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்களாகவும் இருப்பது நமக்குப் பெருமை சேர்ப்பதாகும் . எழுத்தாளர் சுகுமாறனின் தாய்மொழி மலையாளம் ; நஞ்சுண்டனின் தாய்மொழி கன்னடம் இதுபோல் திலீப்குமாரின் தாய்மொழி குஜராத்தி . தமிழின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளரான திலீப்குமார் சிறுகதைகள் மட்டுமின்றி மொழிபெயர்ப்பு , இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்குகிறார் . தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக திலீப்குமாரின் 88 சிறுகதைகளின் தொகுப்பினை சுபஸ்ரீ கிருஷ்ணசாமி ஆங்கிலத்தில் கொண்டுவந்துள்ளார் . திலீப்குமாரின் மூன்று சிறுகதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன . கணையாழி இதழில் வெளிவந்த ’ தீர்வு ’ சிறுகதை இலக்கிய சிந்தனையின் பரிசு பெற்...