இந்தி புனைவிலக்கிய முன்னோடி – முன்ஷி பிரேம்சந்த் . முன்ஷி பிரேம்சந்த் இந்தி புனைவிலக்கிய முன்னோடியாகத் திகழ்ந்தார் . தன்பத் ராய் என்ற இயற்பெயர் கொண்ட பிரேம்சந்த் இந்தி , உருது இரு மொழிகளிலும் எழுதி இந்தியா முழுவதும் அறியப்பட்ட எழுத்தாளராக வலம் வந்தார் . காந்தியத்தில் தீவிர பற்றுக் கொண்டிருந்த பிரேம்சந்த் , காந்தியின் வேண்டுகோளை ஏற்றுத் தன்னுடைய அரசுப் பணியைத் துறந்தார் . விடுதலைப் போராட்டத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் காவல்துறையின் கண்காணிப்பிலேயே இருந்தார் . காலனிய ஆட்சியும் , நிலப்பிரபுத்துவமும் ஏழை எளிய மக்களைச் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதை தன் சிறுகதைகளில் சித்தரித்தார் . ஒரு விதவையைத் திருமணம் செய்து தன்னுடைய கதைகளில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் சமூகச் சீர்திருத்தத்தை உயர்த்திப்பிடித்தார் . ‘ சேவா சதன் ’, ’ நிர்மலா ’, ‘ கர்மபூமி ’, ’ ரங்கபூமி ’, ‘ கோதான் ’, போன்ற பன்னிரண்டு சிறந்த நாவல்களை எழுதியதனால் ’ உபன்யாஸ் சாம்ராட் ’ ( நாவல்களின் மாமன்னர் ) என்றழைக்கப்பட்டார் . ’ சேவா சதன் ’ நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டுப் பிரபல்யமடைந்தது . எம் . எஸ் . சுப்புலட்சு...