Skip to main content

பிரபஞ்சன் சிறுகதைகள் - ஓர் அறிமுகம்

 

பிரபஞ்சன்

மானுடம் வெல்லும்என்பது பிரபஞ்சனின் ஒரு நாவல் தலைப்பு மட்டுமல்ல அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையும்கூட, ஆம்; பிரபஞ்சன் எப்போதும் தன் எழுத்துக்களில் மனிதனின் மேன்மைகளைப் போற்றுகிறார். நல்லதும் கெட்டதுமான கூட்டுக் கலவைதானே மனித வாழ்வு. வில்லன்கள் என்றும் ஹீரோக்கள் என்றும் மனிதர்கள் தனித்தனியாகப் பிறப்பதில்லையே. ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் மிருகங்களில் உயர்வான மிருகம் மனிதன் (Paragon of Animals) என்றுரைப்பார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எந்தவொரு மனிதனும் பிரமிக்கத்தக்க காரியங்களைச் செய்து முடிக்கிறானே! அவனே சபலங்களுக்கு ஆட்படும்போது சிறுமைப்பட்டும் போகிறானே! தெய்வம் பாதி, மிருகம் பாதி என்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தீதும், நன்றும் குடிகொண்டு அவனை ஆட்டிவைக்கின்றன. பிரபஞ்சன் மனிதனின் உன்னத தருணங்களை மட்டுமே தன்னுடைய படைப்புகளில் காட்சிப்படுத்துகிறார்.

சாகித்திய விருது பெற்ற பிரபஞ்சன் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் பிரபஞ்சனுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன. பிரபஞ்சன் எழுதியுள்ளமகாபாரதம்இதிகாசத்தை மறுகுரலில் சொல்லிடும் அரிய படைப்பாகும்மானுடம் வெல்லும்மிகச் சிறந்த வரலாற்று நாவல். பிரெஞ்சு ஆளுநருக்கு துபாஷியாக இருந்த ஆனந்தரங்கம் என்பவரின் டைரிக் குறிப்பிலிருந்து எழுதப்பட்ட முக்கியமான நாவல். வரலாற்றை சிதைக்காமல், புனைகதையாக்கலாம் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டுமானுடம் வெல்லும்நாவல்.

பிரபஞ்சனின் கதைக்களம் பரந்துபட்டது. புதுவை மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் புனைகதைகளில் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் எழுதிச் சென்றுள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவை அப்படியொன்றும் தமிழகத்திலிருந்து வித்தியாசமான மாநிலம் இல்லை. காலனிய காலத்தில் தமிழகம் ஆங்கிலேயர் வசமும், புதுச்சேரி பிரெஞ்சுக்காரர் வசமும் அடிமையாக இருந்தன. தமிழகத்திலிருந்து அரசு, ஆட்சி முறைகளில் இருந்து மட்டுமே புதுச்சேரி மாறுபட்டிருக்கிறது. ஆனால் கலாச்சார  அடிப்படையில் இரண்டும் ஒன்றுபட்ட பரப்புதான்.

பாதுகைபிரபஞ்சனின் சிறுகதைகளில் தனித்துவமானது. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளைக் காலனிகளாக்கி அவற்றின் இயற்கை வளங்களை எல்லாம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் கொள்ளையடித்துச் சென்றன. காலனிகளை நிர்வாகம் செய்திட தங்கள் நாட்டிலிருந்து அதிகாரிகளை அனுப்பினார்கள். பிரெஞ்சுக் காலனியான புதுச்சேரியை நிர்வகிக்க பிரான்சிலிருந்து அதிகாரிகள் வந்தனர். அவர்கள் இந்தியர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்றும், அவர்களை நாகரீகப்படுத்தவே தாங்கள் அவதரித்து உள்ளதாகவும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தியர்களை அடிமைகளைப் போல் நடத்தினர். படித்துப் பதவியிலிருந்த இந்திய அதிகாரிகள் கூட பிரெஞ்சு அதிகாரிகளுக்குச் சரிசமமாக உட்கார முடியாது. பிரெஞ்சு அதிகாரிகள் சாதாரண இந்தியர்களை மட்டுமல்ல இந்திய அதிகாரிகளையும் கேவலமாகவே நடத்தினர்.

பிரபஞ்சனின்பாதுகைகதையில், பிரெஞ்சு நீதிபதி ஒருவர் இந்திய வழக்கறிஞர் ஒருவரை இழிவுபடுத்துவதையும், அதை எதிர்த்து அந்த வழக்கறிஞர் வீரம் செறிந்த போராட்டம் நடத்துவதையும் காண்கிறோம். பாதுகை கதையின் நாயகன் தன்மானமிக்க பொன்னுத்தம்பி பிள்ளை என்ற வக்கீல். காலனிய காலத்தில் ராமன் ஆண்டால் என்ன; ராவணன் ஆண்டால் என்ன என்று அற்ப ஜீவிதம் நடத்தியவர்களே பெரும்பான்மை இந்தியர்கள். ஆனால் பொன்னுத்தம்பி போன்ற விடுதலை வேட்கையும், போர்க்குணமும் தன்மானமும் கொண்டிருந்தவர்களையே    இன்று நாம் நினைவு கூர்கிறோம்.

கோர்ட்டில் பிரெஞ்சு நீதிபதி முன்னால் பளபளக்கும் பாதுகைகளை கால்களில் அணிந்து காட்சியளிக்கிறார். வக்கீல் பொன்னுத்தம்பி. பிரெஞ்சுத் துரைக்கு கோபம் கொப்பளிக்கிறது. பாதுகை அணிந்து நீதிமன்ற வளாகத்தில் வருவதற்கு இந்தியர்களுக்கு உரிமை இல்லைஎன்று ஆணவத்துடன் பிரெஞ்சு நீதிபதி கத்துகிறார். ”இந்த நீதிமன்றத்தில் நீதி பரிபாலனம் செய்யவே நாம் அனைவரும் கூடியுள்ளோம். இதில் நமக்குள் நிறம், மதம், இனமாச்சரியங்களுக்கு இடமில்லைஎன்று பொன்னுத்தம்பி வாதாடுகிறார். பிரெஞ்சுதுரை சினத்தின் உச்சியில் காலனிய அடிமைகளுக்கு பாதுகை அணியும் உரிமையில்லை. மீறினால் பொன்னுத்தம்பியின் வழக்காடும் உரிமை பறிக்கப்படும் என்று தீர்ப்பளிக்கிறார். தீர்ப்பிற்கு அடிபணிய மறுக்கிறார் பொன்னுத்தம்பி. பாரிஸ் நகரில் இருக்கும் உச்சநீதி மன்றத்திற்கு மேல்மனு செய்கிறார். மாதங்கள் ஓடுகின்றன. ஆனால் உச்சநீதி மன்றத்திலிருந்து பதிலேதும் வரவில்லை. பொன்னுத்தம்பியின் தந்தையும் பிறரும் நெருக்கடி கொடுக்கின்றனர். பொன்னுத்தம்பி மன உறுதியுடன் பொறுமை காக்கிறார். பதின்மூன்று மாதங்கள் கழிந்து தீர்ப்பு வருகிறது. ”சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ள பிரெஞ்சுப் பேரரசு, காலனிய நாட்டினரும் பிரெஞ்சு மக்களுக்குச் சமமாக உடை அணிவதில் தடையேதும் இல்லை என்று உச்சநீதி மன்றம் கருதுகிறது. எனவே புதுவை நீதிபதி அளித்த தீர்ப்பு. செல்லாது என்று ஆணித்தரமான உத்தரவைப் பிறப்பிக்கிறது. வெற்றியுடன் பாதுகை அணிந்து நெஞ்சை நிமிர்த்தி  நீதிமன்றம் மீண்டும் வருகிறார் பொன்னுத்தம்பி.

சிக்கன் பிரியாணியும், ஸ்ரீதேவி படமும்பிரபஞ்சனின் மற்றுமொரு சிறந்த கதை. அப்பாவி மக்களிடம் பணத்தைச் சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகளைப் பகடி செய்யும் கதை. தன் விதவைத் தங்கைக்கு அரசு வேலை கிடைத்திட சிபாரிசு வேண்டி தொகுதி எம்.எல்..வைச் சந்திக்க கிராமத்திலிருந்து வருகிறான் மண்ணாங்கட்டி என்ற அப்பாவி இளைஞன். எம்.எல்..வும் அவனின் உதவியாளனும் பணத்துடன் வந்தால் உதவுவதாகக் கூறுகிறார்கள். சொத்துக்களை விற்றுப் பணம் சேர்த்து மீண்டும் நம்பிக்கையுடன் வருகிறான் மண்ணாங்கட்டி. அவன் கொடுக்கும் பணத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டும், ஸ்ரீதேவி படம் பார்த்தும் கும்மாளம் அடிக்கிறான் எம்.எல்.. உதவியாளன். பணக்கட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டுஉன் தங்கைக்கு வேலை கிடைத்துவிடும். நீ போகலாம்என்கிறான். அவன் சற்றும் எதிர்பாராமல் மண்ணாங்கட்டி அவன் கால்களில் விழுந்துஅண்ணே! உங்களைத்தான் நம்பியுள்ளேன், என் தங்கையின் வாழ்வில் நீங்கள் தான் ஒளியேற்ற வேண்டும்என்று கண்ணீர் மல்கச் சொல்லி விடைபெறுகிறான், உதவியாளனின் கல் மனமும் கரைகிறது. இனியாவது மண்ணாங்கட்டியின் தங்கைக்கு உதவி செய்வது என்ற நல்லெண்ணம் அவன் மனதில் துளிர்க்கிறது என்று பிரபஞ்சன் கதையை முத்தாய்ப்பாய் முடிக்கிறார்.

                             பேரா.பெ.விஜயகுமார்.

                             செல்: 9500740687

             --------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...